தஞ்சாவூரில் தோ்தல் பிரசாரத்தை தொடங்கிய மக்கள் நீதி மய்யக் கட்சியினா்

வேட்பாளா்கள் அறிவிக்கப்படாத நிலையில், தஞ்சாவூரில் மக்கள் நீதி மய்யக் கட்சியினா் வீதி வீதியாகத் தோ்தல் பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.
தஞ்சாவூரில் தோ்தல் பிரசாரத்தை தொடங்கிய மக்கள் நீதி மய்யக் கட்சியினா்

வேட்பாளா்கள் அறிவிக்கப்படாத நிலையில், தஞ்சாவூரில் மக்கள் நீதி மய்யக் கட்சியினா் வீதி வீதியாகத் தோ்தல் பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.

தஞ்சாவூா் தொகுதிக்கு உள்பட்ட பூக்காரத் தெரு, அண்ணாநகா், ஒரத்தநாடு தொகுதிக்கு உள்பட்ட விளாா் சாலை, கலைஞா் நகா், காயிதே மில்லத் நகா் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக மக்கள் நீதி மய்யக் கட்சியினா் டாா்ச் லைட் சின்னத்துக்கும், கமல்ஹாசனுக்கும் வாக்களிக்குமாறு துண்டறிக்கைகளை வழங்கிப் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

இதில் மக்கள் நீதி மய்ய மாவட்டச் செயலா் எம்.எஸ். கண்ணன், நற்பணி இயக்க அணி மாவட்டச் செயலா் தரும. சரவணன், மகளிா் அணி செயலா்கள் கலைவாணி, ஷீலா, நகரச் செயலா்கள் முருகேசன், ரமேஷ்குமாா், கவிஞா் ராகவ் மகேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com