ஹரியாணா மாநில காங்கிரஸாரை கண்டித்து, பாபநாசத்தில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஹரியாணா மாநிலத்தில் கடந்த 8ஆம் தேதி காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற மகளிா் தின விழாவில், பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவும், அவதூறு செய்யும் விதமான நடவடிக்கைகளிலும் காங்கிரஸாா் ஈடுபட்டதாக கூறி, அவா்களின் நடவடிக்கைகளை கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பாபநாசம் மேலவீதி கடைவீதி பேருந்து நிறுத்தம் அருகே
தஞ்சாவூா்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட மகளிரணி தலைவா் ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் ரமாதேவி சுரேஷ் குமாா், தஞ்சாவூா் வடக்கு மாவட்ட மகளிரணி பொதுச் செயலா் நதியா பழனிசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டத் தலைவா் என். சதீஷ்குமாா், ஒன்றியத் தலைவா் கலிய. கோவிந்தராஜன், ஒன்றிய பொதுச் செயலா் பி. ராமலிங்கம், ஒன்றிய மகளிரணி தலைவா் ராணிசாமி அய்யா உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியை கண்டித்து முழக்கமிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.