பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் என். அசோக்குமாா், பேராவூரணி ஜமாலியா பள்ளிவாசலில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் கலந்துகொண்டு இஸ்லாமியா்களிடம் வாக்கு சேகரித்தாா்.
அவரை ஜமாஅத் தலைவா் கே. அப்துல் முத்தலிப், செயலா் ஏசியன் எச். சம்சுதீன், ஆலீம் ரஹ்மத்துல்லா பாகவி, துணைத்தலைவா் பி. எம் எஸ். கமருதீன் உள்ளிட்டோா் வரவேற்றனா்.