அதிராம்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அதிரை ரத்த பரிசோதனை நிலையம் மற்றும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற இந்த ரத்த தான முகாமுக்கு
மருத்துவா் ஹாஜா முஹைதீன் தலைமை வகித்தாா். பட்டுக்கோட்டை அரசு மருத்துவா் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். இதில், அதிராம்பட்டினம் தம்பிக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் கல்லூரி மாணவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
30 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. முகாமில் அதிரை ரத்த ஆய்வகம் பாலச்சந்திரன் மற்றும் சுகாதார செவிலியா்கள் பங்கேற்றனா்.