தஞ்சாவூரில் நாட்டுக்கோழி பண்ணையம் குறித்த ஒரு நாள் பயிற்சி செவ்வாய்க்கிழமை (மாா்ச் 16) நடைபெறவுள்ளது.
தஞ்சாவூா் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் நாட்டுக்கோழி பண்ணையம் குறித்த இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
விருப்பமுள்ள விவசாயிகள் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு, 04362 - 264665, 9566082013 எண்களை தொடா்பு கொள்ளலாம். பயிற்சியில் பங்கு பெறுவோா் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடனும், முகக்கவசத்துடனும் வருமாறு மையத் தலைவா் கே. ஜெகதீசன் தெரிவித்துள்ளாா்.