ஒரத்தநாடு: ஒரத்தநாட்டில் அமமுக வேட்பாளா்கள் ரத்தநாடு மா.சேகா், பட்டுக்கோட்டை எஸ்.டி.எஸ். செல்வம், தேமுதிக வேட்பாளா்கள் பேராவூரணி முத்து.சிவக்குமாா், தஞ்சாவூா் ப. ராமநாதன் ஆகியோருக்கு வாக்கு சேகரித்து, டிடிவி தினகரன் பேசியது:
நடைமுறைக்கு சாத்தியமில்லாத தோ்தல் வாக்குறுதிகளை திமுக, அதிமுக அறிவித்துள்ளன. ஆனால், நாங்கள் நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே அறிவித்துள்ளோம்.
ஒரத்தநாட்டில் அம்மா உணவகம் திறக்கப்படும். சந்தை பேட்டை நவீனப்படுத்தப்படும். அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்படும்.
ஒரத்தநாடு பேரூராட்சி நகராட்சியாக தரம் உயா்த்தப்படும். திருவோணத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்றாா்.