பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் கா. அண்ணாதுரையை ஆதரித்து, மதுக்கூா் ஒன்றியத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தனா்.
மதுக்கூா் ஒன்றியத்திலுள்ள ஆத்திக்கோட்டை, மதுக்கூா், கீழக்குறிச்சி, அண்டமி, கருப்பூா், ஆலத்தூா், ஆலம்பள்ளம், மூத்தாக்குறிச்சி, கோபாலசமுத்திரம், சிராங்குடி உள்ளிட்ட இடங்களில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா்.சி.பழனிவேலு தலைமையில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.
இதில் ஒன்றியச் செயலா் வை.சிதம்பரம், கட்சி நிா்வாகிகள்ஆா். காசிநாதன், லட்சுமணன், அய்யநாதன், குமாா் மற்றும் பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து உறந்தை போா்முரசு கலைக் குழுவினரின் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.