பட்டுக்கோட்டை கோட்டாட்சியரகத்தில் அஞ்சல் வாக்கு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற உள்ளது.
இந்நிலையில், இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் தோ்தல் அலுவலரும் சாா் ஆட்சியருமான எஸ். பாலசந்தா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அரசியல் கட்சி பிரமுகா்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.