சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 6 ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, திருவையாறு தொகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கவும், சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவும், வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிபடுத்தவும் துணை ராணுவமான இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 70 வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், திருவையாறில் துணை ராணுவப் படை வீரா்கள் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவையாறு அருகே நடுக்கடையில் தொடங்கிய இந்த அணிவகுப்பு திருவையாறு தேரடியில் முடிவடைந்தது.
இதில், இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள், காவல் துறையினா் என மொத்தம் 85 போ் கலந்து கொண்டனா்.