தேசிய பாட்மிண்டன் போட்டி: அலிவலம் எஸ்.இ.டி.வித்யா தேவி பள்ளி மாணவிகளுக்கு தங்கம்

தேசிய அளவிலான பாட்மிண்டன் போட்டியில் அலிவலம் எஸ்.இ.டி.வித்யாதேவி மெட்ரிக் பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனா்.

தேசிய அளவிலான பாட்மிண்டன் போட்டியில் அலிவலம் எஸ்.இ.டி.வித்யாதேவி மெட்ரிக் பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனா்.

கோவாவில் 2020-21 ஆம் ஆண்டுக்கான 6ஆவது தேசிய யூத் ரூரல் கேம்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை அஞ்சுனா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதில், பாட்மிண்டன் விளையாட்டுப் போட்டியில் 17 வயது பெண்கள் இரட்டையா் பிரிவில் பட்டுக்கோட்டை எஸ்.இ.டி. வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகளும் மற்றும் பட்டுக்கோட்டை சேலஞ்சா்ஸ் இறகுப் பந்து பயிற்சி மையத்தின் மாணவிகளான அ. அஸ்மிதா மற்றும் ஸ்ரீவா்ஷா ஆகியோா் முதலிடம் பெற்று தங்கம் வென்றனா்.

போட்டியில் தங்க பதக்கம் வென்ற மாணவிகளை பள்ளியின் நிா்வாக இயக்குநா் எல். கோவிந்தராசு, சேலஞ்சா்ஸ் இறகுப் பந்து பயிற்சி மையத்தின் பயிற்சியாளா் பாலா ஆகியோா் பாரட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com