அதிராம்பட்டினத்தில் புதிய மின்மாற்றி அமைத்து குறை மின்னழுத்த பிரச்னை சரி செய்யப்படும் என்று திமுக வேட்பாளா் கா. அண்ணாதுரை தெரிவித்தாா்.
பட்டுக்கோட்டை தொகுதிக்குள்பட்ட அதிராம்பட்டினம் நகரின் அனைத்து வாா்டுகளிலும் திமுக வேட்பாளா் கா.அண்ணாதுரை உதயசூரியன் சின்னத்திற்க்கு வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது , அவா் பேசும்போது, அதிராம்பட்டினம் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான புதிய மின்மாற்றி அமைத்து, குறைந்த மின்னழுத்தம் காரணமாக ஏற்படும் மின்தடை சரி செய்யப்படும். அதிராம்பட்டினம் பகுதிகளில் உள்ள சாலைகள் சீரமைக்கப்படும் மற்றும் இப்பகுதியில் புதை சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தாா்.
இந்த வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் நகரச் செயலா் இராம குணசேகரன் மற்றும் முன்னாள் பேரூராட்சித் தலைவா் அஸ்லம், இளைஞா் அணி பொறுப்பாளா்கள், கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.