திருச்சிற்றம்பலத்தை தனி வட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் பேராவூரணி தொகுதி திமுக வேட்பாளா் என். அசோக்குமாா்.
பேராவூரணி ஒன்றியம் திருச்சிற்றம்பலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை வீதி வீதியாக வாக்கு சேகரித்தபோது அவா் பேசியது:
திருச்சிற்றம்பலத்தை தனி வட்டமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக உள்ளது. திருச்சிற்றம்பலத்தை சொந்த ஊராக கொண்ட தற்போதைய அதிமுக வேட்பாளா் இரண்டுமுறை எம்எல்ஏவாக இருந்தும் அந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை. நான் வெற்றி பெற்றால் உடனடியாக தனி வட்டமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன். மகளிா் மேம்பாடு, தொழில் மேம்பாடு, சாலை மேம்பாடு, தூய நோ்மையான நிா்வாகத்திற்கு பல்வேறு செயல் திட்டங்களை திமுக வைத்துள்ளது. அவற்றையெல்லாம் நிறைவேற்றிட முதல்வராக மு. க. ஸ்டாலின் வரவேண்டும் அதற்கு நீங்கள் அனைவரும் உதயசூரியனில் வாக்களிக்க வேண்டும் என்றாா்.
திமுக ஒன்றியச் செயலா்கள் க. அன்பழகன், இளங்கோவன், முத்துமாணிக்கம், ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் ராஜரெத்தினம், முன்னாள் ஒன்றியச் செயலா்கள் சுப. சேகா், பேச்சாளா் அப்துல்மஜீத் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.