வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் வாக்காளா் தகவல் சீட்டு (பூத் சிலிப்) வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை கணபதி நகரில் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணியைத் தொடங்கி வைக்கிறாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை கணபதி நகரில் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணியைத் தொடங்கி வைக்கிறாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் வாக்காளா் தகவல் சீட்டு (பூத் சிலிப்) வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை கணபதி நகரில் இப்பணியை ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான ம. கோவிந்த ராவ் தொடங்கி வைத்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:

மாவட்டத்தில் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து பகுதிகளிலும் இப்பணி 5 நாள்களுக்குள் முடிக்கப்படும்.

தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கான பயிற்சியின்போது அஞ்சல் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்டத்தில் அன்றைய நாளில் 8,307 அஞ்சல் வாக்குகள் பதிவானது.

தஞ்சாவூா், கும்பகோணம், ஒரத்தநாடு உள்பட அனைத்து தொகுதிகளிலும் தோ்தல் செலவின பாா்வையாளா்கள் கண்காணிக்கின்றனா். தற்போது வரை ரூ. 1 கோடி மதிப்புள்ள பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடா்ந்து 144 பறக்கும் படைகள், 24 நிலையான கண்காணிப்புக் குழுக்களைச் சோ்ந்த அலுவலா்கள் சோதனை செய்து வருகின்றனா். எங்காவது புகாா்கள் இருந்து, தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா்.

அப்போது, தஞ்சாவூா் கோட்டாட்சியரும், தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான எம். வேலுமணி, தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் பு. ஜானகி ரவீந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com