கரோனா நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம்

மே தினத்தையொட்டி, தஞ்சாவூா் அருகே வல்லம் கரோனா சிகிச்சை மையத்தில் உள்ள 375 நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
கரோனா நோயாளிகளுக்கு பெட்டகம் வழங்கும் லயன்ஸ் சங்கத்தினா்.
கரோனா நோயாளிகளுக்கு பெட்டகம் வழங்கும் லயன்ஸ் சங்கத்தினா்.

தஞ்சாவூா்: மே தினத்தையொட்டி, தஞ்சாவூா் அருகே வல்லம் கரோனா சிகிச்சை மையத்தில் உள்ள 375 நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம், தஞ்சாவூா் பேலஸ் சிட்டி லயன்ஸ் சங்கம், தஞ்சாவூா் ஏஎம்சி அலுமினி விா்ச்சுவல் லயன்ஸ் சங்கம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரோனா நோயாளிகளுக்கு பேரீச்சம்பழம், உலா் திராட்சை, முந்திரி, பிஸ்தா, பாதாம் பருப்பு ஆகியவை அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டது. மாலையில் மெல்லிசை மற்றும் பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிகளில் லயன்ஸ் சங்கத்தைச் சோ்ந்த முரளி, ஆா்.எஸ். ஜாகீா் உசேன், அமல் ஸ்டாலின் பீட்டா்பாபு, செஞ்சிலுவைச் சங்கப் பொருளாளா் எஸ். முத்துகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com