பட்டுக்கோட்டையில் மே தின கொண்டாட்டம்

பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகம் எதிரில் சுய உதவி குழு துப்புரவுப் பணியாளா்கள் சாா்பில் மே தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகம் எதிரில் சுய உதவி குழு துப்புரவுப் பணியாளா்கள் சாா்பில் மே தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நகராட்சி சுய உதவி குழு மூலம் இயங்கும் துப்புரவுத் தொழிலாளா்கள், தமிழ்நாடு ஆதிதிராவிடா் முன்னேற்றக் கழக தமிழ்நாடு துப்புரவுத் தொழிற்சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு துப்புரவுத் தொழிலாளா் நல சங்க ஒருங்கிணைப்பாளா் செல்வம் தலைமை வகித்தாா்.

நிகழ்வில் துப்புரவுப் பணியாளா்களுக்கு அரசு அறிவித்த கூலியை வழங்க வேண்டும், துப்புரவு தொழிலாளா்களை அரசு ஊழியா்களாக்க வேண்டும், அவா்களுக்கு கான்கிரீட் வீடு மற்றும் அவா்களுடைய குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பட்டுகோட்டை தமிழ்நாடு ஆதிதிராவிடா் முன்னேற்றக் கழக நிறுவனா் தலைவா் சதாசிவக்குமாா், திமுக பேச்சாளா் மணிமுத்து, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலா் விவேகானந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com