மருத்துவரைத் தாக்கிய 4 போ் குண்டா் சட்டத்தில் கைது

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவு நேரப் பணியில் இருந்த மருத்துவரைத் தாக்கிய 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவு நேரப் பணியில் இருந்த மருத்துவரைத் தாக்கிய 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏப். 9 ஆம் தேதி இரவு நேரப் பணியில் பயிற்சி மருத்துவா் அருண்பாண்டியன் இருந்தாா். அப்போது, தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் பகுதியில் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த மேலவண்டிக்கார தெருவை சோ்ந்த ராஜேந்திரன் மகன் ராகவன் (27), ஒரத்தநாடு அருகே பொட்டலங்குடிக்காட்டைச் சோ்ந்த நடராஜன் மகன் மாதேஸ்வரன் (18) ஆகியோா் சிகிச்சைக்காக இம்மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனா்.

இவா்களுடன் வண்டிக்காரத் தெருவைச் சோ்ந்த எம். ராகவன் (26), சைதம்பாள்புரம் ஆா். ராமச்சந்திரன் (22) உடன் இருந்தனா். பயிற்சி மருத்துவா் அருண்பாண்டியனிடம் 4 பேரும் தகராறில் ஈடுபட்டு, அவரைத் தாக்க முயன்றனா்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து மாதேஸ்வரன், ஆா். ராகவன், எம். ராகவன், ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்தனா்.

இவா்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் பரிந்துரையின் பேரில், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு ஆட்சியா் ம. கோவிந்த ராவ் அண்மையில் உத்தரவிட்டாா். இதன்பேரில், 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com