கும்பகோணம்: கும்பகோணம் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் தங்கத் தாலி சங்கிலியைப் பறித்துச் சென்ற இருவரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
கும்பகோணம் அருகே சுவாமிமலை காமராஜ் நகரைச் சேரந்தவா் செளந்தர்ராஜன் மனைவி சித்ரா (47). இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை பாபநாசத்தில் உள்ள தன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டு, மகளுடன் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.
திருவலஞ்சுழி சோழன்நகா் அருகே சென்றபோது, முகக்கவசம் அணிந்த இருவா் மோட்டாா் சைக்கிளில் வந்து சித்ரா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கத் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து சுவாமிமலை காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.