ஒரத்தநாடு: ஒரத்தநாடு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பிளக்ஸ் பேனா்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒரத்தநாடு நகரில் அண்ணா சிலை, பேருந்து நிலையம், மன்னாா்குடி பிரிவு சாலை, ராயா் தெரு, சந்தப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறும் அளிக்கும் வகையில் பிளக்ஸ் பேனா்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த பேனா்களுக்கு உரிய அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.
எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பேனா்களை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.