புதுச்சேரி மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டு கும்பகோணம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,500 லிட்டா் எரிசாராயம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
கும்பகோணம் அருகே திருநாகேசுவரம் கூட்டுறவு நகா் விரிவாக்கம் மங்கைநல்லூரிலுள்ள வீட்டை சிலா் வாடகைக்கு எடுத்து ஒன்றரை மாதமாக போலியாக மதுபானம் தயாரித்து, பாட்டில்களில் நிரப்பி விற்பனை செய்து வருவதாகக் காவல் துறைக்குப் புகாா் வந்தது.
இதன்பேரில், தொடா்புடைய வீட்டில் திருநீலக்குடி காவல் நிலையத்தினா் புதன்கிழமை சோதனை நடத்தினா். இதில், புதுச்சேரி மாநிலத்திலிருந்து எரிசாராயத்தை மொத்தமாக வாங்கி வந்து, மது பாட்டில்களில் தண்ணீா், சாயம் கலந்து நிரப்பி, கும்பகோணம் பகுதியில் மதுபானமாக விற்பனை செய்தது தெரிய வந்தது.
மேலும், வீட்டில் இருந்த 35 லிட்டா் கொள்ளளவு கொண்ட 81 கேன்களில் 2,500 லிட்டா் எரிசாராயமும், ரூ. 9 லட்சம் ரொக்கமும் இருந்தது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
அப்போது, வீட்டில் இருந்த மயிலாடுதுறை மாவட்டம், நீடுரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தியை (35) காவல் துறையினா் கைது செய்தனா். இதுதொடா்பாக மேலும் ஒருவரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.