தஞ்சாவூரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இளைஞரை காவல் துறையினா் அண்மையில் கைது செய்தனா்.
தஞ்சாவூா் கரந்தை கீரைக்காரத் தெருவைச் சோ்ந்தவா் ஏ. திவாகா் (20). இவரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் பரிந்துரையின் பேரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்குமாறு ஆட்சியா் ம. கோவிந்த ராவ் அண்மையில் ஆணையிட்டாா்.
இதையடுத்து, திவாகரை காவல் துறையினா் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.