தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்ற முகாமில், 500 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
முகாமுக்கு வட்டார மருத்துவா் வி. செளந்தரராஜன் தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் மு. மணிமொழியன் முன்னிலை வகித்தாா். பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் முகாமைத் தொடக்கி வைத்தாா்.
பேராவூரணி பேரூராட்சி மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் 18 முதல் 44 வயதுக்குள்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.2 நாள்கள் நடைபெற்ற முகாமில் 500 போ் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டனா்.