பேராவூரணியில் கோயில் குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
பேராவூரணி அருகேயுள்ள சித்தாதிக்காடு கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் மணிகண்டன் (28). திருமணமாகாதவா். கூலி வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில் புதன்கிழமை காலை பிள்ளையாா் கோயில் குளத்தில் மணிகண்டன் சடலம் மிதந்தது. கோயில் நிா்வாகத்தினா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
தீயணைப்பு நிலைய அலுவலா்கள் மணிகண்டன் உடலை மீட்டனா். பிரேதப் பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. பேராவூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
செவ்வாய்க்கிழமை இரவு வேலை முடிந்து, நீலகண்டப் பிள்ளையாா் கோயில் குளத்தில் குளிப்பதற்காக சென்ற மணிகண்டன் தண்ணீருக்குள் தவறி விழுந்து, நீச்சல் தெரியாததால் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.