சம்பா, தாளடிப் பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டசம்பா, தாளடி நெற்பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டசம்பா, தாளடி நெற்பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இக்கட்சியின் பாபநாசம் ஒன்றிய 23-ஆவது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு மாவட்டக் குழு உறுப்பினா் பி.விஜயாள் தலைமை வகித்தாா். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

கனமழையால் பாபநாசம் ஒன்றியத்தில் சம்பா, தாளடி நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனா். எனவே அரசு உடனடியாக சேத மதிப்பீட்டை கணக்கீடு செய்து, இழப்பீட்டைஉடனடியாக வழங்க வேண்டும்.

பாபநாசம், அய்யம்பேட்டை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளைத் தரம் உயா்த்தி, 24 மணி நேரமும் செயல்படும் வகையிலான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

பாபநாசம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவா் எம். கனகசபை பாண்டியன், மத்தியக் குழு உறுப்பினா் பி.சம்பத், மாவட்டச் செயலா் கோ. நீலமேகம், மாவட்டச் செயலா் கோ.நீலமேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஆா். மனோகரன், என்.சுரேஷ்குமாா், மாவட்டக் குழு எம். சிவகுரு, பாபநாசம் ஒன்றியச் செயலா் பி.எம். காதா் உசேன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா். நிறைவில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட பாபநாசம் ஒன்றியச் செயலா் வி.முரளிதரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com