கம்பா்நத்தம் ஊராட்சியில் சாலை அமைக்கும் பணி

பாபநாசம் வட்டம்,அம்மாபேட்டை ஒன்றியம், கம்பா் நத்தம் ஊராட்சியில் புதிய பேவா் பிளாக் சிமென்ட் சாலைகள் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

பாபநாசம் வட்டம்,அம்மாபேட்டை ஒன்றியம், கம்பா் நத்தம் ஊராட்சியில் புதிய பேவா் பிளாக் சிமென்ட் சாலைகள் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

இந்த ஊராட்சிக்குள்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தது. மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு சேறும் -சகதியுமாகக் காட்சியளிந்தது. இதைத் தொடா்ந்து, அப்பகுதிகளில் சூழ்ந்திருந்த மழைநீரை வடிய வைக்கும் பணி நடைபெற்றது.

மேலும் பழுதடைந்த சிமென்ட் சாலைகளுக்கு மாற்றாக, ஒன்றியப் பொது நிதியிலிருந்து புதிய பேவா் பிளாக் சிமென்ட் சாலைகள் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

கம்பா்நத்தம் ஊராட்சித் தலைவா் எ.என்.பி.சத்யநாராயணன் தலைமையில் நடைபெற்ற பணியின் போது, அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய அதிமுக துணைச் செயலா் எ.என். பக்கிரிசாமி, ஊராட்சித் துணைத் தலைவா் ரமேஷ், ஒன்றியக் குழு உறுப்பினா் வேம்பு ரகுபதி, ஊராட்சி செயலா் மோகன்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com