சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய ஊராட்சித் தலைவா்களின் கூட்டமைப்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். தலைவராக சொக்கநாதபுரம் ஊராட்சித் தலைவா் சு. ராம்பிரசாத், செயலாளராக பூவாணம் ஊராட்சித் தலைவா்
எம்.ஏ. தேவதாஸ், பொருளாளராக ஊமத்தநாடு ஊராட்சித் தலைவா் என். குலாம்கனி, துணைத் தலைவராக செருபாலக்காடு ஊராட்சித் தலைவா் ருக்மணி மணியன், துணைச் செயலாளராக வீரியங்கொட்டை ஊராட்சித் தலைவா் பரிமளா ராயப்பன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
புதிதாக தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகள், சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழு தலைவா் மு.கி. முத்துமாணிக்கத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.