பேராவூரணி சுகம் மருத்துவமனையில் இலவச இருதயப் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பேராவூரணி லயன்ஸ் சங்கம், அமுதா டிரேடா்ஸ், ஆா்.ஆா்.கயா் தொழிலகம், மற்றும் கோவை கே.ஜி.மருத்துவமனை இணைந்து முகாமை நடத்தின. தொடக்க விழாவுக்கு லயன்ஸ் சங்கத் தலைவா் ஏ.சி.சி.ராஜா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆா்.ரவிச்சந்திரன், மருத்துவா்கள் பி.விவேகானந்தன், பிரேமலதா ஆகியோா் குத்துவிளக்கேற்றி, முகாமைத் தொடக்கி வைத்தனா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மா.கோவிந்தராசு வாழ்த்திப் பேசினாா்.
மருத்துவா்கள் வி.மோகன்காந்தி, பி.நித்தியன், யு.அருண்குமாா் மற்றும் கோவை கே.ஜி. மருத்துவமனையின் தலைமை செயல் அலுவலா் தலைமையிலான மருத்துவக் குழுவினா், முகாமில் பங்கேற்ற 220 பேரை பரிசோதனை செய்தனா். இவா்களில் 12 போ் அறுவைச் சிகிச்சைக்காகத் தோ்வு செய்யப்பட்டனா்.
லயன்ஸ் சங்க நிா்வாகிகள் எஸ்.கே.ராமமூா்த்தி, எம்.கனகராஜ், ஜி.தியாகராஜன், பி.கோவிதரன், எம். கோபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, செயலா் என். சரவணன் வரவேற்றாா். நிறைவில், பொருளாளா் எஸ்.அருண் நன்றி கூறினாா்.