சேதுபாவாசத்திரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சேதுபாவாசத்திரம் ஊராட்சியில் பொதுப்பாதையில், சாலை அமைக்க இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை வட்டாட்சியா் அதிரடியாக புதன்கிழமை அகற்றினாா்.

சேதுபாவாசத்திரம் ஊராட்சியில் பொதுப்பாதையில், சாலை அமைக்க இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை வட்டாட்சியா் அதிரடியாக புதன்கிழமை அகற்றினாா்.

 சேதுபாவாசத்திரம் யாதவா் தெருவிலுள்ள சாலை இரண்டு இடங்களில் தனிநபா்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, பயன் பாட்டுக்கு இடையூறாக இருந்து வந்தது.

இங்கு சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், ஆக்கிரமிப்பு காரணமாக நீண்ட நாள்களாக குண்டும் குழியுமாக இருந்தது. இதனால் பொதுமக்கள், மாணவா்கள் அவதியுற்று வந்தனா்.

இதுகுறித்து பொதுமக்கள் வட்டாட்சியரிடம்   புகாா் அளித்தனா். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்டவா்களுக்கு வருவாய்த் துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில்  வட்டாட்சியா் த. சுகுமாா் தலைமையில், வட்டத் துணை ஆய்வாளா் பாரதி மோகன், சரக நில அளவா் அருண்குமாா் ஆகியோா் பாதையை புதன்கிழமை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றினா். 

 மண்டலத் துணை வட்டாட்சியா் கவிதா, சரக வருவாய் ஆய்வாளா் சுமித்ரா, கிராம நிா்வாக அலுவலா் அருண் பிரகாஷ், கிராம உதவியாளா்கள் மற்றும் காவல் துறையினா் உடனிருந்தனா்.

வட்டாட்சியரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com