வாக்கு எண்ணிக்கை அலுவலா்களுக்குப் பயிற்சி

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றிய அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலா்களுக்கான பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றிய அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலா்களுக்கான பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்த ஒன்றியத்தில் அடங்கியுள்ள மாவட்ட ஊராட்சியின் 16-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கான தோ்தல் அக்டோபா் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதைத் தொடா்ந்து 12-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதையொட்டி வாக்கு எண்ணிக்கைப் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கான பயிற்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசன் தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையா் ம. ஆனந்தராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா் சொ.முருகன் மற்றும் வாக்கு எண்ணிக்கை அலுவலா்கள் பயிற்சியில் பங்கேற்றனா்.

தொடா்ந்து வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள், வாக்காளா்களுக்கான கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் 101 வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com