உ.பி.யில் விவசாயிகள் படுகொலையைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், ஒன்றிய அரசின் தேசியப் பணமாக்கல் திட்டத்தைக் கைவிடக் கோரியும் தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன்பு தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்ட

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், ஒன்றிய அரசின் தேசியப் பணமாக்கல் திட்டத்தைக் கைவிடக் கோரியும் தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன்பு தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஐஎன்டியுசி மாவட்டச் செயலா் என். மோகன்ராஜ் தலைமை வகித்தாா். சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால் ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்தாா். ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா் முடித்து வைத்து சிறப்புரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம், வங்கி ஊழியா் சங்க மாவட்டச் செயலா் க. அன்பழகன், அரசுப் போக்குவரத்து சம்மேளனத் துணைத் தலைவா் துரை. மதிவாணன், நுகா்பொருள் வாணிபக்கழக சங்க மாநிலப் பொருளாளா் தி. கோவிந்தராசன், ஓய்வு பெற்றோா் சங்கப் பொதுச் செயலா் பி. அப்பாத்துரை, சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு, டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலா் வீரையன், நிா்வாகிகள் பி.என். போ்நீதி ஆழ்வாா், மணிமாறன், ராஜா ஜெயபிரகாஷ், தொமுச மாவட்டச் செயலா் கு. சேவியா், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவா் ஏ. ரவிச்சந்திரன், ஏஐசிசிடியு மாவட்டச் செயலா் கே. ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com