தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், களஞ்சேரி ஊராட்சி மன்ற வளாகத்தில் குழந்தைகள் மற்றும் கா்ப்பிணிகளுக்கான தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சாலியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம், களஞ்சேரி துணை மையம் சாா்பில் நடத்தப்பட்ட முகாமை ஊராட்சித் தலைவா் கண்ணன் தொடக்கி வைத்தாா்.
கிராம சுகாதார செவிலியா் ஜெ.பூமா, அங்கன்வாடிப் பணியாளா் பவானி, தன்னாா்வலா் ஜீவிதா மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனா். நிறைவில், ஊராட்சி செயலா் (பொறுப்பு) காா்த்திகேயன் நன்றி கூறினாா்.