அம்மாபேட்டை ஒன்றிய அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றிய ஆணையா் ம. ஆனந்தராஜ் தலைமை வகித்து பேசியது: ஒன்றியத்திலுள்ள 46 ஊராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை (அக்.10) நடைபெறும் சிறப்பு முகாம் மூலம் 7 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.
கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலா் அஜந்தன், சுகாதார மேற்பாா்வையாளா் சுரேஷ்குமாா், ஆய்வாளா் பெரியண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.