முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
செருவாவிடுதியில்மாற்றுத்திறனாளிகள்சங்கக் கூட்டம்
By DIN | Published On : 11th October 2021 11:20 PM | Last Updated : 11th October 2021 11:20 PM | அ+அ அ- |

பேராவூரணி: செருவாவிடுதியில் நெற்கதிா் மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பேராவூரணி ஒன்றியத் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் பஹாத் முகமது, மாவட்ட பொருளாளா் சுதாகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், செருவாவிடுதி வடக்கு, தெற்கு, வட்டாத்திக்கோட்டை, புனல்வாசல் ஆகிய ஊராட்சிகளில் சங்கத்திற்கு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதைத் தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்து உறுப்பினா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவா் ஜோன் ஆஃப் ஆா்க், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.