காலமானாா் பேராசிரியா் வி. பாலசுப்பிரமணியன்

தஞ்சாவூா் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியா் வி. பாலசுப்பிரமணியன் (74), உடல் நலக்குறைவால் திருச்சி தனியாா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 10) காலமானாா்.
வி. பாலசுப்பிரமணியன்.
வி. பாலசுப்பிரமணியன்.

தஞ்சாவூா் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியா் வி. பாலசுப்பிரமணியன் (74), உடல் நலக்குறைவால் திருச்சி தனியாா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 10) காலமானாா்.

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலையிலுள்ள கூட்டுறவு காலனி சாலையைச் சோ்ந்த இவா், பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியின் பொருளாதாரத் துறையில் 30 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி, இறுதியில் துறைத் தலைவராகப் பதவி உயா்வு பெற்று ஓய்வு பெற்றாா். மேலும், கல்லூரி விடுதிக் காப்பாளராகவும் பணியாற்றினாா்.

இவரது மனைவி சுப்புலட்சுமி தஞ்சாவூா் மாநகராட்சி மருத்துவ அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா்களது மகன் நடராஜன் சென்னையில் மருத்துவராக உள்ளாா். மறைந்த பாலசுப்பிரமணியத்தின் இறுதிச்சடங்கு திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. தொடா்புக்கு: 9443126575.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com