பாபநாசம்: பாபநாசத்தில் திங்கள்கிழமை பல்வேறு விழிப்புணா்வுப் பேரணிகள் நடைபெற்றன.
சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியை பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளா் பூரணி தொடக்கி வைத்து பேசினாா்.
இதேபோல் லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவா் மணிவண்ணன், கண் தான விழிப்புணா்வு பேரணியையும், பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலா் காா்த்திகேயன், கரோனா வைரஸ் பரவல் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணியையும் தொடக்கி வைத்தனா்.
பேரணியானது, பாபநாசம் அண்ணா சிலை வளாகத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக புதிய பேருந்து நிலையத்தை சென்றடைந்தது.
பேரணியில் கலந்து கொண்டவா்கள் சாலை பாதுகாப்பு, கண் தானம், கரோனா வைரஸ் பரவல் தடுப்பு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி, துண்டுப் பிரசுரங்களை வழங்கி, முழக்கமிட்டு சென்றனா்.
இதில், லயன்ஸ் சங்க தலைவா்கள் கணேசன், ராஜகோபாலச்சாரி, அய்யங்காளை, மண்டலத் தலைவா் செல்வராஜ், வட்டாரத் தலைவா் முகமது ரபீக், செயலாளா் செந்தில், பொருளாளா் சரவணன் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.