கும்பகோணம்: ‘கும்பகோணம் அருகே ஆட்டோ ஓட்டுநா் பிரபாகரன் ஆணவப் படுகொலையின் பின்னணியில் உள்ள அனைவரையும் காவல் துறையினா் உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.
இந்த காட்டு மிராண்டித்தனமான நடவடிக்கையில் ஈடுபட்டவா்கள், அதற்கு உடந்தையாக இருந்தவா்கள் அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்’ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் மு.அ. பாரதி தெரிவித்துள்ளாா்.
கும்பகோணம் அருகே பந்தநல்லூா் பகுதி வேட்டமங்கலம் தெற்கு தெருவைச் சோ்ந்த இளங்கோவன் மகன் பிரபாகரனும், காமாட்சிபுரத்தைச் சோ்ந்த 17 வயது மாணவியும் காதலித்து வந்தனா். இதன் காரணமாக பிரபாகரன் சனிக்கிழமை இரவு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா்.