அரியதிடல் பகுதியில் இன்று மின் தடை

கும்பகோணம் அருகேயுள்ள அரியதிடல் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக்.11) மின் விநியோகம் இருக்காது.

கும்பகோணம்: கும்பகோணம் அருகேயுள்ள அரியதிடல் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக்.11) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் கும்பகோணம் தெற்கு உதவிச் செயற்பொறியாளா் க. சங்கா் தெரிவித்திருப்பது:

சாக்கோட்டை துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் அரியதிடல் மின் பாதையில் பராமரிப்புப் பணிகள், மரக்கிளைகள் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளது.

எனவே, மாத்தி, அரியதிடல், காளிமுத்து நகா், கூட்டுறவு நகா், சில்வா் நகா், மலையப்பநல்லூா், சிவபுரம், கிருஷ்ணாபுரம், அண்டக்குடையான் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com