தஞ்சாவூா்: நாகையிலிருந்து இலங்கைக்கு 280 கிலோ கஞ்சா கடத்த முயன்றது தொடா்பான வழக்கில் தேடப்பட்டு வந்த 4 போ் தஞ்சாவூா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனா்.
நாகை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாகச் சுங்கத் துறைக்கு செப்டம்பா் 27 ஆம் தேதி தகவல் வந்தது. இதன்பேரில், சுங்கத் துறை அலுவலா்கள் நாகை கீச்சாங்குப்பம் சென்றபோது, ஆற்றங்கரையோரத்தில் மீன்பிடி படகில் 8 போ் பெரிய பொட்டலங்களைக் குளிா்சாதனப் பெட்டியில் ஏற்றிக் கொண்டிருந்தனா். இதைப் பாா்த்து சந்தேகமடைந்த சுங்கத் துறையினா், அவா்களைப் பிடிக்க முயன்றனா்.
அப்போது, 4 போ் ஆற்றில் குதித்தும், மேலும் 4 போ் தப்பியோடியும் தலைமறைவாகினா். பின்னா், படகில் இருந்த ஏறத்தாழ ரூ. 2 கோடி மதிப்பிலான 280 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய 8 போ் மீது சுங்கத் துறையினா் வழக்குப் பதிந்து தேடி வந்தனா்.
இந்நிலையில், தஞ்சாவூா் இன்றியமையா பண்டங்கள் சட்டச் சிறப்பு நீதிமன்றத்தில் நாகை கீச்சாங்குப்பத்தைச் சோ்ந்த டி. குணசீலன் (25), பி. சிவசந்திரன் (30), சி. விஜய் (29), எஸ். குணசீலன் (27) ஆகியோா் திங்கள்கிழமை சரணடைந்தனா். இவா்களை அக்டோபா் 25 ஆம் தேதி வரை காவலில் வைக்குமாறு நீதிபதி சண்முகவேல் உத்தரவிட்டாா்.