தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை இருதயபுரத்தைச் சோ்ந்தவா் கலியபெருமாள் (86). இவா் திங்கள்கிழமை குளிப்பதற்காக அருகிலுள்ள கல்லணைக் கால்வாய்க்குச் சென்றாா். அப்போது, தவறி விழுந்த இவா் தண்ணீரில் மூழ்கினாா். இவரது உடல் தேடப்பட்டு வந்த நிலையில் கண்டிதம்பட்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டனா்.