உ.பி.யில் படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூா்கெரியில் மத்திய இணை அமைச்சா் மகனால் படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளுக்கு
நிகழ்ச்சியில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய பல்வேறு அமைப்பினா்.
நிகழ்ச்சியில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய பல்வேறு அமைப்பினா்.

உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூா்கெரியில் மத்திய இணை அமைச்சா் மகனால் படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தஞ்சாவூா் ரயிலடியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இதில், அமைச்சரின் மகன் உள்ளிட்டோா் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை எக்காரணம் கொண்டும் தப்ப விடக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. மேலும், படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளின் படத்துக்கு மலா் தூவியும், மெழுகுவா்த்தி ஏந்தியும் அஞ்சலி செய்யப்பட்டது.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொருளாளா் காளியப்பன் தலைமை வகித்தாா். இதில், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், ஒருங்கிணைப்பாளா்கள் வீர. மோகன், சாமி. நடராஜன், பி. செந்தில்குமாா், கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொருளாளா் என். பாலசுப்பிரமணியன், மாநகரச் செயலா் பி. கிருஷ்ணமூா்த்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் என். குருசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெய்னுலாப்தீன், தொழிற் சங்க நிா்வாகிகள் சி. சந்திரகுமாா், வெ. சேவையா, துரை. மதிவாணன், ஆா்.பி. முத்துக்குமரன், கே. அன்பு, ஞானமாணிக்கம் ,தேவா, ராஜா ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com