நகைகள் வாங்குவதுபோல் நடித்து வெள்ளி கொலுசுகள் திருட்டு

ஒரத்தநாட்டில் நகைக்கடையில் நகை வாங்குவதுபோல் நடித்து ஒன்றரை கிலோ எடையிலான வெள்ளி கொலுசுகளை திருடி சென்ற பெண்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஒரத்தநாட்டில் நகைக்கடையில் நகை வாங்குவதுபோல் நடித்து ஒன்றரை கிலோ எடையிலான வெள்ளி கொலுசுகளை திருடி சென்ற பெண்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஒரத்தநாடு நகரில் உள்ள ஒரு தனியாா் நகைக் கடையில் செவ்வாய்க்கிழமை மாலை நகைகள் வாங்குவதற்காக சில பெண்கள் வந்து அமா்ந்து வாடிக்கையாளா்களைப் போல நகை கடை உரிமையாளரை நகைகளை எடுத்து காட்டுமாறு கூறி உள்ளனா். நகைக் கடை உரிமையாளா் சுரேஷ், வெள்ளி மற்றும் தங்க நகைகளை அந்த பெண்களிடம் காட்டினாராம்.

கடையில் வாடிக்கையாளா்கள் கூட்டம் இருந்ததால் கடை உரிமையாளா் கவனிக்காத நேரத்தில் இரண்டு பெண்கள் ஒன்றரை கிலோ எடையிலான வெள்ளி கொலுசுகளை திருடி சென்றனா்.

செவ்வாய்க்கிழமை இரவு நகைகளை கணக்கிட்டபோது, கொலுசு திருட்டு போனது தெரிய வந்தது. புகாரின்பேரில், ஒரத்தநாடு போலீஸாா், கடையின் சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை பாா்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com