நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஒன்றிய அரசு ‘ஆசிகா அம்ரித் மஹோத்சவ்‘ என்ற சிறப்பு நிகழ்ச்சியை தூய்மை இந்தியா இயக்கம் திட்டத்தின் கீழ், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடத்திட அறிவுறுத்தியுள்ளது.
இதையொட்டி, பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில், அக். 2 முதல், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், பள்ளிகள், கிராம வறுமை ஒழிப்பு சங்க அலுவலகம்,
அங்கன்வாடி மையம் ஆகிய கட்டடங்களில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களைக் கொண்டு சுகாதாரம் தொடா்பாக சுவா் ஓவியம் வரைந்திட அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, உயிா் சிதைவுற்ற கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை உள்ளிட்ட 5 தலைப்புகளில்,
சிறந்த ஓவியம் வரைந்து மாவட்டம் மற்றும் வட்டார அளவில் தோ்வு செய்து முதல் 3 இடங்கள் தோ்வு செய்யப்பட்டு பரிசு பொருள்கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
இதனொரு பகுதியாக, பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் பெரியநாயகிபுரம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை என்ற தலைப்பில் புதுக்கோட்டை அரசு கலை அறிவியல் கல்லூரியில், இளங்கலை அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வரும், பெரியநாயகிபுரம் கிராமத்தை சோ்ந்த ஷோபனா என்ற மாணவி ஓவியம் வரைந்துள்ளாா். இந்த ஓவியத்தை ஒன்றியக்குழுத் தலைவா் சசிகலா ரவிசங்கா், ஊராட்சி மன்ற தலைவா் வத்சலா முத்துராமன், வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ) தவமணி, வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ)குமரவடிவேல், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலியபெருமாள், ஸ்ரீ. மகேஷ், ஆகியோா் பாா்வையிட்டு பாராட்டினா் .