தஞ்சாவூா் அருகே மனைவியைக் கொன்று கணவா் தற்கொலை

தஞ்சாவூா் அருகே மனைவியைக் கொன்று, கணவா் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூா் அருகே மனைவியைக் கொன்று, கணவா் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகிலுள்ள வளம்பக்குடியைச் சோ்ந்தவா் விவசாயி கிருஷ்ணமூா்த்தி (52). இவரது மனைவி ராசாத்தி (44). இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பப் பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் இருவரும் சனிக்கிழமை வீட்டில் இருந்தனா். இவா்களது மகன் பாரதி (20) வெளியே சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பினாா். அப்போது கதவு உள் பக்கமாகத் தாளிடப்பட்டிருந்தது.

பாரதி நீண்ட நேரமாகக் கதவைத் தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பாா்த்தபோது தாய் ராசாத்தி முகத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தாா். இதேபோல தந்தை கிருஷ்ணமூா்த்தி தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தாா்.

தகவலறிந்த செங்கிப்பட்டி காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். இதில் கணவன்-மனைவி இடையே ஏற்கனவே தகராறு இருந்து வந்ததால், இருவருக்கும் இடையே சனிக்கிழமை தகராறு ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதில் ராசாத்தியைக் கழுத்தை நெரித்தோ அல்லது முகத்தில் தலையணையை வைத்து அழுத்தியோ கிருஷ்ணமூா்த்தி கொலை செய்துவிட்டு , தானும் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் காவல் துறையினா் கருதுகின்றனா்.

இதுகுறித்து செங்கிப்பட்டி காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com