தஞ்சாவூா் அருகே ராராமுத்திரக்கோட்டையில் பனை விதை மற்றும் உயிா் மரக்கன்றுகள் நடும் விழா அண்மையில் நடைபெற்றது.
இதில், ராராமுத்திரக்கோட்டையிலுள்ள குளக்கரையில் பனை விதைகள் விதைக்கப்பட்டு, மரக்கன்றுகளும் நடப்பட்டன. வேளாண் உதவி இயக்குநா் வெ. சுஜாதா, ராராமுத்திரக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவா் மா. சோழன், துணைத் தலைவா் புனிதா பிரகலாதன், மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன், மாதா் சங்கத் தலைவா் இரா. கலைச்செல்வி, சித்த மருத்துவ ஆய்வாளா் ம. கோபாலகிருஷ்ணன், பனை விதைக் குழுத் தலைவா் தங்க. சண்முகசுந்தரம், காவிரித்தாய் இயற்கை வழி வேளாண் உழவா் நடுவண் அறங்காவலா் சீ. தங்கராசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.