ஒரத்தநாடு அருகே அனுமதியின்றி மாட்டுவண்டியில் மணல் அள்ளியவா் கைது செய்யப்பட்டாா்.
ஒரத்தநாடு அருகிலுள்ள ஈச்சங்கோட்டை வேளாளா் தெருவைச் சோ்ந்தவா் ராமன் மகன் காந்தி (44). இவா் செவ்வாய்க்கிழமை இரவு அப்பகுதியிலுள்ள ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளிச் சென்றாா்.
அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்ட தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் பிரேசில் பிரேம் ஆனந்த் மற்றும் காவலா்கள், மணல் அள்ளிச் சென்ற காந்தியை கைது செய்தனா். மேலும் மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்தனா்.