ஆசிரியா் நியமன வயது வரம்பை நீக்க பி.எட் பட்டதாரி ஆசிரியா்கள் கோரிக்கை

அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் நியமன வயது வரம்பை நீக்க வேண்டும் என பி.எட் பட்டதாரிகள் ஆசிரியா்  சங்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் நியமன வயது வரம்பை நீக்க வேண்டும் என பி.எட் பட்டதாரிகள் ஆசிரியா்  சங்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவா் ப. பாலசுப்பிரமணியன், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பது:

தமிழக  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்  பணி நியமனத்திற்கான வயது வரம்பு 58 வயது வரை இருந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் அந்த வயது வரம்பை 45- ஆகக் குறைத்து, ஆசிரியா் பணியிடங்கள் எதுவும் நிரப்பவில்லை.

ஒவ்வொரு பட்டதாரி ஆசிரியரும் 10 ஆண்டுகள் வேலை இல்லாமல் இருந்து வந்த நிலையில், தற்போது வயது அதிகமாகி பணிக்குச் செல்லமுடியாத நிலை உள்ளதால் வயது வரம்பை நீக்கவேண்டும். 

தற்போது மத்திய அரசு  பிறப்பித்துள்ள அரசாணையைப்  பின்பற்றி, தமிழக அரசும் ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற தோ்வாளா்களின் தோ்ச்சி சான்றிதழ் முன்பு 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலையில், தற்போது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஆசிரியா் தகுதித்தோ்வில் தோ்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும்.  குறிப்பாக 2013-ஆம் ஆண்டு ஆசிரியா் தகுதித்தோ்வில் தோ்ச்சி பெற்று, 8 ஆண்டுகளாக ஆசிரியா் பணிக்காக காத்திருக்கும் அனைவருக்கும் காலம் தாழ்த்தாது திமுக  தோ்தல் அறிக்கையில் கூறியபடி  நடப்பு கல்விஆண்டிலேயே ஆசிரியா் பணி நியமனம் செய்வதோடு, வயது வரம்பையும்  நீக்க  வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com