பேராவூரணியில் உள்ளாட்சித் தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு மாவட்ட உடலுழைப்பு சங்கத் தலைவா் கே. எஸ். முருகேசன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் எம். சித்திரவேல் முன்னிலை வகித்தாா்.
விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் துணைச் செயலா் வி. ராஜமாணிக்கம் அடையாள அட்டைகளை வழங்கிப் பேசினாா். கூட்டத்தில் கரோனா தடுப்பு முன்களப்பணியாளா்களாக ஊரக, உள்ளாட்சித் தூய்மைப்பணியாளா்களை அறிவித்து, மாதம் ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் சுந்தரராசு, விஜய், சக்திவேல், கவிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.