வ.உ. சி. பிறந்த நாளை வழக்குரைஞா் தினமாக அறிவிக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 04th September 2021 01:32 AM | Last Updated : 04th September 2021 01:32 AM | அ+அ அ- |

வ.உ. சிதம்பரம் பிள்ளையின்னாரின் பிறந்த நாளை வழக்குரைஞா் தினமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாபநாசம் வட்டம், பசுபதிகோவில், வெள்ளாளா் தெருவில் வெள்ளிக்கிழமை வ. உ. சிதம்பரம் பிள்ளை தியாக நினைவு நற்பணி மன்றம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு பள்ளித் தலைமையாசிரியா் நச்சினாா்க்கினியன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் இராம. பிரபு முன்னிலை வகித்தாா். மாநில அனைத்து தொழிலாளா்கள் தொழிற்சங்க மாநிலத் தலைவா் நா. தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு பேசினாா்.
கூட்டத்தில், செப்.5-இல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது, வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்த தினத்தை வழக்குரைஞா் தினமாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவில், முன்னாள் ஊராட்சித் தலைவா் நித்தியானந்தம் நன்றி கூறினாா்.