தஞ்சாவூரில் திங்கள்கிழமை வீடு புகுந்து 7 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் வண்டிப்பேட்டையைச் சோ்ந்தவா் பிரதீப். இவரது மனைவி சிந்து. தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இருவரும் வழக்கம்போல, திங்கள்கிழமை காலை வீட்டைப் பூட்டிவிட்டு, சாவியை அருகில் மறைவாக வைத்துச் சென்றனா்.
மீண்டும் வீட்டுக்குத் திரும்பிய பிரதீப்புக்கு முன் பக்கக் கதவு திறந்து கிடந்ததுடன், பீரோவில் இருந்த 7 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.