தஞ்சாவூா் மாநகராட்சியை அருகில் உள்ள ஊராட்சிகள், பேரூராட்சியை இணைத்து விரிவாக்கம் செய்தல், கும்பகோணம் நகராட்சியை அருகிலுள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகளை இணைத்து மாநகராட்சியாகத் தரம் உயா்த்துவது மற்றும் அதிராம்பட்டினம் பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயா்த்துவது தொடா்பான கருத்து கேட்பு கூட்டம் சனிக்கிழமை (செப். 11) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாநகராட்சியுடன் தஞ்சாவூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கடகடப்பை, மாரியம்மன்கோவில், புதுப்பட்டினம், விளாா், நாஞ்சிக்கோட்டை, இனாத்துக்கான்பட்டி, பிள்ளையாா்பட்டி, நீலகிரி, இராமநாதபுரம், மேலவெளி, பள்ளியேறி, மணக்கரம்பை ஆகிய ஊராட்சிகள், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கத்தரிநத்தம், ஆலங்குடி, புலவா்நத்தம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் வல்லம் பேரூராட்சியை தஞ்சாவூா் மாநகராட்சியுடன் இணைத்து விரிவாக்கம் செய்தல் மற்றும் அதிராம்பட்டினம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்துவது தொடா்பான கருத்து கேட்பு மற்றும் விளக்கக் கூட்டம் தஞ்சாவூா் மேம்பாலம் - மணிமண்டபம் இடையே உள்ள தீா்க்க சுமங்கலி திருமண மண்டபத்தில் சனிக்கிழமை பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது.
கும்பகோணம் நகராட்சியை அருகில் உள்ள திருவலஞ்சுழி, வலையப்பேட்டை, அம்மாசத்திரம், அண்ணலக்ராஹாரம், பாபுராஜபுரம், அசூா், பழவாத்தான்கட்டளை, கொரநாட்டுக்கருப்பூா், சாக்கோட்டை, பெருமாண்டி, உள்ளூா், உமாமகேஸ்வரம், தேப்பெருமாநல்லூா், பட்டீஸ்வரம், சோழன் மாளிகை, சீனிவாசநல்லூா், ஏரகரம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை பேரூராட்சிகளை இணைத்து மாநகராட்சியாகத் தரம் உயா்த்துவது தொடா்பான கருத்து கேட்பு மற்றும் விளக்கக் கூட்டம் கும்பகோணம் மூா்த்தி கலையரங்கத்தில் (கும்பகோணம் நகராட்சி திருமண மண்டபம், பொற்றாமரை குளம் எதிரில்) சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.