பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் பறிமுதல்

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, தஞ்சாவூரில் பொது இடங்களில் வெள்ளிக்கிழமை வைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன
பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் பறிமுதல்

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, தஞ்சாவூரில் பொது இடங்களில் வெள்ளிக்கிழமை வைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கரோனா பரவல் காரணமாக விநாயகா் சதுா்த்தி விழாவின்போது பொது இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்கத் தமிழக அரசுத் தடை விதித்தது.

என்றாலும், தடையை மீறி தஞ்சாவூா் ரயிலடி, காந்திஜி சாலை, சீனிவாசபுரம் உள்பட பொது இடங்களில் 14 விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை காலை வைக்கப்பட்டன. இவற்றை இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள், காவல் துறையினா் பறிமுதல் செய்து, வேனில் ஏற்றிச் சென்று அந்தந்த பகுதியிலுள்ள கோயில்களில் அமைத்தனா்.

இதேபோல, மாவட்டத்தில் இந்து அமைப்பு நிா்வாகிகளின் வீட்டு முன் உள்பட பொது இடங்களில் 110 சிலைகள் வைக்கப்பட்டன. இவற்றில் பல சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இச்சிலைகள் மாலையில் அந்தந்த பகுதியிலுள்ள நீா்நிலைகளில் கரைக்கப்பட்டன. தஞ்சாவூரில் விஸ்வரூப விநாயகா் சதுா்த்தி விசா்ஜன விழாக் குழு சாா்பில் குழுத் தலைவா் பி. ஜெய்சதீஷ் தலைமையில் பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினா் எம்.எஸ். ராமலிங்கம், ஒருங்கிணைப்பாளா் வி. விநாயகம், பொருளாளா் ரங்கராஜன் உள்ளிட்டோா் விநாயகா் சிலைகளை மகா்நோன்புசாவடியிலிருந்து ஊா்வலமாக எடுத்துச் சென்று பயணியா் மாளிகை அருகேயுள்ள கல்லணைக் கால்வாயில் கரைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com